செங்கல்பட்டு: செங்கல்பட்டு, அனுமந்தபொத்தேரி பகுதியில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர், பொதுமக்களிடம் கத்திமுனையில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதாக செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் தனிப்படை அமைத்து, போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், அனுமந்தபுத்தேரியில் நேற்று முன்தினம் இரவு, பொதுமக்களிடம், 3 பேர் வழிப்பறியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், அவர்களை மடக்கிபிடித்து, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.