வழிப்பறி வாலிபர்கள் 3 பேர் சிக்கினர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, அனுமந்தபொத்தேரி பகுதியில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர், பொதுமக்களிடம் கத்திமுனையில்  வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதாக செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் தனிப்படை அமைத்து, போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், அனுமந்தபுத்தேரியில் நேற்று முன்தினம் இரவு, பொதுமக்களிடம், 3 பேர் வழிப்பறியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், அவர்களை மடக்கிபிடித்து, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அதில், மலைப்பூங்கா பகுதியை சேர்ந்த கவுதம் (29), வினோத் (எ) பீட்டர் (26), பெரியநத்தம் ஆகாஷ் (27) என தெரிந்தது. அவர்களிடம் இருந்து 3 அரிவாள், ₹2 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: