ஐதராபாத்: பாரத் பயோடெக் நிறுவனம் பிரேசிலில் உள்ள தனது கூட்டு நிறுவனம் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததை தொடர்ந்து, கோவாக்சின் தடுப்பூசி மருத்துவ பரிசோதனைக்கு அளிக்கப்பட்டு இருந்த அனுமதியை பிரேசில் அரசு ரத்து செய்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள பிரெசிசா மெடிகமன்டோஸ் மற்றும் என்விக்சியா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துக்கு, 2 கோடி கோவாக்சின் தடுப்பூசியை வினியோகம் செய்ய, ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த பிப்ரவரி 26ம் தேதி ஒப்பந்தம் செய்தது. இதில், ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, பாரத் பயோடெக் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பிரேசில் அரசு ரத்து செய்தது.