சேவல் விற்பதில் மோதல் முன்னாள் அதிமுக கவுன்சிலர் குக்கரால் அடித்துக்கொலை

கோவை: கோவை ஒண்டிபுதூர் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் (57). அதிமுக முன்னாள் கவுன்சிலர். இவரது வீட்டில் கார்த்திகேயன் (33) என்பவர் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டிற்கு சூலூர் பாரதிபுரத்தை சேர்ந்த சம்பத்குமார் (32) அடிக்கடி வந்து மது அருந்துவார். அப்போது சீனிவாசனுக்கு பழக்கமானார். கடந்த 16ம் தேதி சம்பத்குமார் தனது 3 சேவல்களை விற்று தருமாறு சீனிவாசனிடம் கொடுத்தார். பின்னர் 2 நாட்கள் கழித்து வந்த சம்பத்குமார் சேவலுக்கான பணத்தை சீனிவாசனிடம் கேட்டார். அதற்கு அவர், அந்த 3 சேவல்களும் இறந்துவிட்டது.

தூக்கி வீசி விட்டேன் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த சம்பத்குமார் குக்கர் மூடியால் சீனிவாசனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவரது மண்டை உடைந்தது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் இறந்தார். இதனையடுத்து சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்கு பதிந்து சீனிவாசனை கைது செய்தனர்.

Related Stories: