மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் கைது

தண்டையார்பேட்டை: சென்னை பாரிமுனை, மண்ணடி குட்டி மேஸ்திரி தெரு பகுதியில் நடைபாதையில் வசிப்பவர் வெங்கடேசன் (28). கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு மனைவி வான்மதியிடம் (26) தகராறு செய்வாராம். இந்நிலையில், வடக்கு கடற்கரை ரயில் நிலையம் எதிரே தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தகாத வார்த்தைகளால் திட்டி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில், ஆத்திரமடைந்த வெங்கடேசன், கையில் வைத்திருந்த கத்தியால் வான்மதியை சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த வான்மதி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். தகவல் அறிந்ததும் வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, வான்மதியை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: