விழுப்புரம்: விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய, சி.வி.சண்முகம், ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்படும் என்ற அறிவிப்பை கண்டித்து வரும் 26ம் தேதி அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். சி.வி.சண்முகத்தின் இந்த அறிவிப்புக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று நாகப்பட்டினத்தில் மீனவளப் பல்கலைக்கழகம் ஏற்கனவே, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.