மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க கோரிக்கை

டெல்லி: மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களவையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று காலை 9.45 மணிக்கு ஆலோசனை நடத்துகின்றனர். வேளாண் சட்டம், செல்போன் ஒட்டுக்கேட்பை கண்டித்து போராட்டம் நடத்த உள்ள நிலையில் எம்.பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: