இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் 14 பேரின் செல்போன்கள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் உலக தலைவர்கள் பலரின் தொலைபேசி எண்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஈராக் அதிபர் பர்ஹம் சாலி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், தென் ஆப்பரிக்க அதிபர் சிரில் ரமபோசா, உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானம், உள்ளிட்டோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.