வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தகட்டூர் சுப்பிரமணியன் காட்டை சேர்ந்த சக்திவேல் - சீதா தம்பதியரின் மகன் சுஹசன் (8). அப்பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறான். கொரோனா தொற்று பரவலால் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்காக பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் டேப்லேட் வாங்க வேண்டும் என்ற ஆசிரியரின் வேண்டுகோளுக்கு ஏற்ப மாணவர்கள் உண்டியலில் பணம் சேர்த்து வந்தனர்.
இந்நிலையில் கொரோனா நிவாரண பணிக்காக, தொழிலதிபர்கள் நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.