ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில்  22,399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 13 லட்சத்து 66 ஆயிரத்து 785-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9077-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 11 லட்சத்து 56 ஆயிரத்து 666 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,01,042 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: