சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ்பாபு ஐஏஎஸ், பத்மபிரியா ஆகியோர் விலகியுள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். ஏற்கனவே கட்சியின் துணை தலைவராக இருந்த மகேந்திரன் விலகிய நிலையில் தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த சந்தோஷ்பாபுவும் விலகியுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு நடந்து முடிந்த சட்டமன்ற வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட அவர் தனது சொந்த காரணங்களுக்காக கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 6 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை தர கமல்ஹாசனால் மட்டுமே முடியும் என்பதால் அவருடன் இருப்பதாக சந்தோஷ் பாபு ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.