முக்கிய செய்தி இந்தியா 2 முதல் 18 வயது வரை உள்ளவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி May 13, 2021 மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் டெல்லி: 2 முதல் 18 வயது வரை உள்ளவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஜன 16ம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், 2 முதல் 18 வயதுடையோருக்கு 2 மற்றும் 3ம் கட்டமாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி மருத்துவ பரிசோதனை செய்ய பாரத் பயோடெக் நிறுவனம் அளித்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 2 முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தி 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனை செய்ய மருந்து கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தன்னார்வலர்களின் 525 குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் வல்லுநர் குழுவால் பரிசோதனை செய்யப்படவுள்ளது. சோதனை வெற்றிகரமாக நடந்தால் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என மத்திய அரசு குறிப்பில் தெரிவித்துள்ளது.
காந்தி நகரில் போட்டியிடும் அமித் ஷாவுக்கு சொந்தமாக கார் இல்லை; ரூ.16 லட்சம் கடன் இருக்கு..! தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்
மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊரில் ஜனநாயக கடமையாற்றிய வெளிநாடு வாழ் தமிழர்கள்..!!
400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே தோல்வி அடைந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் விமர்சனம்
முதல்கட்ட வாக்குப்பதிவில் கிடைத்த தகவல் என்.டி.ஏ. அணிக்கு சாதகமாக உள்ளன: மகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
நாம் வாக்களித்தால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற எண்ணம் தான் வாக்கு சதவீதம் குறைய காரணம் : ராதாகிருஷ்ணன் விளக்கம்
பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு: பாஜகவினர் ஏமாற்றம்?
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்