முக்கிய செய்தி தமிழகம் மதுரையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த தனியார் மருத்துவமனை ஊழியர் கைது May 13, 2021 மதுரோ மதுரை: மதுரையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த தனியார் மருத்துவமனை ஊழியர் இர்பான் கான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கொரோனாவால் இறந்தவர்களின் மருந்து சீட்டை பயன்படுத்தி ரெம்டெசிவர் மருந்து வாங்கி கள்ள சந்தையில் விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது. மேலும் கைது செய்யப்பட்ட இர்பானுக்கும் மருத்துவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கினால் தான் அவர்களது உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த மருந்து வாங்குவதற்கு 5 இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள். மேலும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த தடுப்பு மருந்தை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவை தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: 1.50 லட்சம் போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்பு
நாளை நடக்கிறது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு; மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.! பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது: அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி
மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு
மக்களவை தேர்தலில் வாக்களிக்க முதியோர், மாற்றுத்திறனாளிகளை வீட்டிலிருந்தே அழைத்துச் செல்ல இலவச வாகன வசதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மதுரை கோயில் செங்கோல் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு.. ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்க நாங்கள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என நீதிபதிகள் காட்டம்!!
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு
காசர்கோட்டில் மாதிரி வாக்குப் பதிவின்போது ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுந்ததாக புகார் ஏதும் வரவில்லை : தேர்தல் ஆணையம்
பாரம்பரிய நடைமுறை பாதிப்பதோடு, பக்தர்கள் மனம் புண்படும்.. கள்ளழகர் திருவிழாவில் நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடு விதித்த ஆட்சியர் ஆணைக்கு ஐகோர்ட் கிளை தடை..!!
வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் செயலாற்றினால்தான் இண்டியா கூட்டணியின் வெற்றி உறுதியாகும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாளை ஜனநாயக திருவிழா.. மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்றால் வாக்களிக்கலாம்.. செல்போன் அனுமதி இல்லை.. 16 ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் அமைப்பு!!
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவான விவகாரம்: தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டுகள் பதிவாவதால் அதிர்ச்சி..!!