முக்கிய செய்தி தமிழகம் மதுரையில் ரெம்டெசிவிரை வாங்க 5-வது நாளாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: கள்ளச்சந்தையில் விற்பதாக புகார் May 13, 2021 மதுரோ மதுரை: மதுரையில் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க வெளியூர்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மதுரையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் ஒப்பந்த பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயிர் காக்கும் மருந்தாக கருதப்படும் ரெம்டெசிவிர் மருந்து சென்னையை தொடர்ந்து தற்போது மதுரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று டோக்கன் வழங்காததால் 15 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஏமாற்றத்துடன் மக்கள் வீடு திரும்பினர். ஒரு டோக்கனுக்கு 4 குப்பிகள் என்ற அறிவிப்பினை எதிர்த்து மக்கள் போராடிய பின் 6 குப்பிகள் வழங்கப்படுகின்றன. 75லிருந்து 85 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் வருவதால் டோக்கன் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளனர். ரெம்டெசிவிரை வாங்க 5-வது நாளாக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தினமும் மருத்தவமனைக்கு வந்து மருந்து வாங்காமல் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
“ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி”.. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!
மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் ; 10,92,420 வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிப்பு!!
டெல்லி முதல்வரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட முடியாது.. கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி..!!
100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு : தமிழகம், புதுச்சேரியில் தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!!
கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் பாராட்டத்தக்க பொதுவாழ்க்கையை நடத்தியவர்: கணேசமூர்த்தி மறைவுக்கு வைகோ புகழஞ்சலி
2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா கோஷம் எழுப்பும் மோடியின் பொய் பிரசாரத்தை நம்புவது முட்டாள்தனம்: ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் பரபரப்பு பேட்டி
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு: ஆம் ஆத்மி கட்சி தகவல்
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது; வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: இறுதி வேட்பாளர் பட்டியல் 30ம் தேதி வெளியாகும்