சொல்லிட்டாங்க...

நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசு எப்போதும் பாடுபடும். - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மத்திய அரசு தனது பொறுப்புகளை கைவிட்டதால், சாதாரண குடிமக்கள் கொரோனா சிகிச்சைக்காக சேமிப்பு, நகை, நிலத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. - மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

தமிழக அரசின் சிறைத்துறை காலதாமதம் செய்யாமல் உச்ச நீதிமன்ற ஆணையின்படி சிறைவாசிகளை பிணையில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். - விசிக தலைவர் திருமாவளவன்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆகியவற்றில் புதிதாக எந்த சாதியையும் தமிழக அரசால் சேர்க்க முடியாது.- பாமக நிறுவனர் ராமதாஸ்.

Related Stories: