1880ஆம் ஆண்டு முதல்இப்போது வரை பூமியின் சராசரி வெப்பநிலை கிட்டத்தட்ட ஒரு டிகிரி செல்சியஸை விட கூடுதல் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதை எப்படி கணக்கிட்டிருக்கிறார்கள் என்றால், உலகின் எல்லா இடங்களிலும் உள்ள வெப்பநிலையை ஆவணப்படுத்தி, அதை சராசரியாகக் கணக்கெடுத்தால் வரும் வெப்பநிலை ஒட்டுமொத்தமாக 1.18 டிகிரிகள் அதிகரித்திருக்கிறது. இந்த விகிதமும் வருடாவருடம் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது என்பதுதான் கவலை தரும் விஷயம். மேலும் பூமியின் சராசரி வெப்பநிலை அரை டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் ஒரு பட்டியல் தருகிறார்கள்.