கடலூர்: கடலூர் அருகே ரெட்டிச்சாவடியில் தாய், மகள் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் இளநீர் வியாபாரி இருசப்பன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்னந்தோப்பில் தாய் விஜயலக்ஷ்மி, மகள் சந்தியாவை நகைக்காக இளநீர் வியாபாரி வெட்டிக்கொன்றது அம்பலமாகி உள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் அவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.