கரூர்: கரூர் பரமத்தியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.2.93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆடு வாங்குவதற்காக வடிவேல் என்பவர் தனது காரில் ரூ.2.93 லட்சத்தை எடுத்து சென்றார். வடிவேலிடம் உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.