சென்னை: அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகாவுடன் இன்று அதிமுக தலைமை தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. முன்னதாக நேற்றிரவு அதிமுக குழு ஜி.கே.வாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமகவுடனான பேச்சுவார்த்தை முடிந்து 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜ, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதிக தொகுதிகளை கேட்டு இந்த கட்சிகள் பிடிவாதம் செய்வதால் இன்னும் இழுபறி நீடிக்கிறது.