புதுடெல்லி: தமிழகம் உட்பட தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு காலம், 30 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்தால், அதனை பரிசீலனை செய்து அதற்கான அதிகாரப்பூர்வ பொது அறிவிப்பு வெளியாக 30 நாட்கள் வரை அக்கட்சியினர் காத்திருக்க வேண்டும். இதனால், தேர்தல் நேரத்தில் புதிய கட்சிகள் தொடங்குபவர்களுக்கு இது மிகப்பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. மேலும், பதிவில் ஏதேனும் பிழை இருக்கும் பட்சத்தில் மீண்டும் அதனை திருத்தி தரவும் வேண்டும்.