புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. அரசு உருவாக்கியுள்ள கோ-வின் செயலியில் கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொள்பவர்கள் தாங்களாகவே தங்களின் விவரங்களை பதிவிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.