துரைப்பாக்கம்: கானத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகபு ஜான்(60). அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். கடந்த 2014ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து அச்சிறுமி, அழுதவாறு தன் பெற்றோரிடம் தெரிவித்தாள். இதனைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து கானத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மகபு ஜானை போக்சோவில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.