வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதிக்கு கஞ்சா கடத்தி வருவதாக தஞ்சை கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு தோப்புத்துறையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து வந்த ஒரு தனியார் ஆம்புலன்ஸை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர். நோயாளி ஒருவர் படுத்திருந்தார். அருகில் இருவர் அமர்ந்து இருந்தனர். இதில் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் சோதனை நடத்தினர். பதப்படுத்தபட்ட உயர்ரக ஏற்றுமதிக்கான கஞ்சா 28கிலோ இருந்ததும், இதன் மதிப்பு 50லட்சம் என்பதும் தெரிய வந்தது.