திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் தந்தையால் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட 5 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்னிலத்தை சேர்ந்த ராம்கி என்பவர் அண்மையில் ஜோதிடம் பார்த்ததாக தெரிகிறது. அப்போது அவருடைய 5 வயது மூத்த மகன் சாய்சரனுக்கும், அவருக்கும் ஆகாது என்று ஜோதிடர் கூறியதால் குழந்தையை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவரது மனைவிக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்ட போது தனது மூத்த மகன் சாய்சரண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி ராம்கி எரித்தார்.