புதுடெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி 1.1 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன், தொடர்ந்து 5வது முறையாக, மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடியை தாண்டி விட்டது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி 1,13,143 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி 21,092, மாநில ஜிஎஸ்டி 27,273 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 55,253 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் இறக்குமதி பொருட்கள் மீதான வரி 24,382 கோடி அடங்கும். இதுபோல் செஸ் வரியாக 9,525 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் இறக்குமதி பொருட்கள் மீதான வரி 660 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.