யங்கூன்: மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர், மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. அதற்கு எதிராக மக்கள் தொடங்கி போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், யங்கூனில் நேற்று மருத்துவ மாணவர்கள் பேரணி நடத்தினார்கள். சாலைகளில் திரண்ட மாணவர்கள், ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங் சாங் சூகி உள்ளிட்டோரை விடுவிக்க கோரியும் முழக்கங்களை எழுப்பினார்கள். இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது ராணுவம் மோசமான தாக்குதல் நடத்தியுள்ளது.