கொரோனாவில் இருந்து தப்பிக்க சத்தான உணவை சாப்பிடுங்க! : புதிய ஆய்வில் தகவல்

உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் ெதாற்றை கோவிட்-19 என்றும், கொரோனா வைரஸ் - 2 அல்லது Sars-CoV-2 என்றும் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் கோவிட்-19 தொற்றானது மூக்கு மற்றும் தொண்டை உள்ளிட்ட மேல் சுவாசக்குழாயில் இருக்கும் போது மட்டுமே அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஆய்வில், ‘கொரோனா தொற்று பாதிப்பானது, கீழ் சுவாசக்குழாயை தாக்கும். இதுதவிர, நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வைரஸ் ரத்த நாளங்களில் படையெடுத்து அவற்றுக்குள் வீக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதன் மூலம் இரத்தம் உறைந்து மாரடைப்பு ஏற்படக்கூடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அவசரத் தேவைகளுக்காக இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் போடப்பட்டு வருகிறது. இருப்பினும், கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் குணம் அடைந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிய ஆய்வுகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. அந்த வகையில், கொரோனா பாதிப்புக்கு பின் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள விஞ்ஞானிகள் இணைந்து மிகப்பெரிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

அதில், கொரோனா பாதித்தால் அவர்களது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் மட்டுமல்லாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மிகச் சிறிய உடல் உறுப்புகளையும் வைரஸ் தொற்று பாதிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய பாதிப்புகளில் இருந்து தப்பிக்க தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: