பூண்டி ஒன்றிய குழு கூட்டம்

திருவள்ளூர்: பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பி.வெங்கட்ரமணா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால், ஒன்றிய ஆணையர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் நா.பேபி, எம்.குமார், ஏ.தேன்மொழி, வி.மணி, எம்.பாலாஜி, ஜி.யசோதா, எஸ்.ஞானமுத்து, ஏ.வெங்கடேசன், வி.விஜி, பா.சுபாஷினி, மோ.சுலோச்சனா, ஜெ.ரெஜினா, லி.மஞ்சு மற்றும் அரசு  அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நிவர் புயல், பலத்த மழை காரணமாக பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது என்றும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: