சென்டர் மீடியனில் மோதி தலை குப்புற கவிழ்ந்த கார்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் தறிக்கெட்டு ஓட்டிய கார் சென்டர் மீடியனில் மோதி 5 பல்டி அடித்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், இருந்த கல்லூரி மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தாம்பரம் அடுத்த  பெருங்களத்தூர், தேவநேசன் நகரை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் வீரா (22). கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்  இறுதியாண்டு படிக்கிறார். நேற்று காலை கல்லூரிக்கு காரில் சென்ற வீரா, மதியம் வீட்டுக்கு புறப்பட்டார்.  ரத்தினமங்கலத்தில் இருந்து கொளப்பாக்கம் நோக்கி சென்றபோது, திடீரென கார் தறிக்கெட்டு ஓடியது.

பின்னர், கொளப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி, 5 பல்டிகள் அடித்து, சாலையோரத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடி வந்து, காரில் சிக்கிய வீராவை  மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.புகாரின்படி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: