சித்தூர்: கூலித்தொழிலாளியை பலமுறை பாம்பு கடித்தும் அவர் உயிர் வாழும் அதிசயம் சித்தூரில் நடந்துள்ளது.. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பைரெட்டிப்பள்ளி அடுத்த கும்மரகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(45), கூலித்தொழிலாளி. இவரை கடந்த 8 ஆண்டுகளாக நாகப்பாம்பு ஒன்று பின்தொடர்ந்து வந்து கடித்துள்ளது. இதுவரை 72 முறை கடித்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது: கிராமம் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்றபோது நாகப்பாம்பு காலில் கடித்தது. பின்னர், பலமநேர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து குணமடைந்தேன். கடந்தாண்டு வீட்டில் அமர்ந்திருந்தபோது பாம்பு கடித்தது. இதுவரை சுமார் 72 முறை பாம்புகள் கடித்துள்ளன. கிராமத்தில் இருந்து வெளியூருக்கு கூலி வேலைக்கு சென்றாலும் அங்கேயும் பின் தொடர்ந்து வந்து பாம்பு கடித்தது.