திருமலை: கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வகுப்பறையில் பிளஸ்1 மாணவிக்கு, சக மாணவன் தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஆந்திராவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு (பிளஸ் 1) படிக்கும் மாணவன் வகுப்பறையிலேயே சக மாணவிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இதை மற்றொரு மாணவன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.