சிதம்பரம்: தமிழகம் முழுவதும் கனமழையால் வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும், நீரில் மூழ்கியும் இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். சிதம்பரம் அருகே கிள்ளையில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி கனகம்(65) உயிரிழந்தார். கனமழை காரணமாக சுவர் இடிந்ததால் இடிபாடுகளில் சிக்கி கனகம் உயிரிழந்தார்.