நன்றி குங்குமம் தோழி
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.
*கடுகை வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டால் தாளிக்கும் போது வெடித்துச் சிதறாமல் இருக்கும்.*ரசம் செய்யும்போது சில முருங்கைப் பிஞ்சுகளைப் போட்டு கொதிக்க வைத்தால் புது வகையான மணம் மாறாமல் இருக்கும். சுவையும் கூடும்.- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.*ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய் பொடி, வெந்தய பொடி, பெருங்காய பொடி தாளித்துக் கொட்டினால் புதுமையான ஊறுகாய் ரெடி.*வாழைப்பூ வடையை பொட்டுக்கடலை மாவில் செய்தால் சூப்பராக இருக்கும்.*சாம்பார், ரசம் போன்றவைகளுக்கு பருப்பு வேகவைக்கும் போது துவரம்பருப்புடன் 2 டீஸ்பூன் பாசிப்பருப்பும், 1/2 டீஸ்பூன் வெந்தயமும் சேர்த்து வேகவைத்தால் நன்கு குழைய வெந்து நிறைய இருப்பது போல் தெரியும். மேலும் சாம்பார், ரசம் சீக்கிரம் கெட்டுப் போகாது.- வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்.*சோளே, சென்னா தயாரிக்கும்போது அதில் நீர் பிரிந்து வராமல் இருக்க உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து சேர்த்தால் தண்ணீர் பிரிந்து வராது.*குடைமிளகாய், கத்தரிக்காய், கோவைக்காய்களில் பொடியை அடைத்துக் கறி செய்யும்போது மசாலாப்பொடியுடன் 3 டீஸ்பூன் பொட்டுக்கடலை மாவையும் கலந்து விட்டால் சுவையும் கூடும். மொறுமொறுப்பாகவும் இருக்கும்.*அரிசி களைந்த நீர், பழைய சோற்று நீர் இவைகளில் துருப்பிடித்த கத்தி, அரிவாள், மணை போன்ற பொருட்களை 3 மணி நேரம் ஊறவைத்து எடுத்து ஒரு துணியால் துடைத்தால் துரு போன இடம் தெரியாது.- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.