பெண் கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை உடலை போலீசார் நள்ளிரவில் தகனம் செய்தது மனித உரிமை மீறல்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக நள்ளிரவில் போலீசார் தகனம் செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 வயது தலித் பெண்ணின் இறுதி சடங்கை செய்யக் கூட அவரது குடும்பத்தினருக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இறந்த பெண்ணின் உடலை டெல்லி மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு உத்தரபிரதேச போலீசார் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று நள்ளிரவு இரண்டரை மணியளவில் அவரது கிராமத்தில் தகனம் செய்துள்ளனர். இதைவிட ஒரு அப்பட்டமான மனிதாபிமானமற்ற மனித உரிமை மீறல் வேறு எதுவும் இருக்க முடியாது. இத்தகைய குற்றச் செயல்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதற்கு அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்தனாத்தின் தலித் விரோத போக்குதான் காரணமாகும். இப்படுகொலை குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தர உத்தரபிரதேச மாநில அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: