செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: முன்னாள் மேயர் சிவராஜின் 129வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மின்ட் தங்க சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன், பெஞ்சமின், கடம்பூர் ராஜூ, சரோஜாஉள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், வேளாண் சட்டம் பொறுத்தவரை எந்த விவசாயிக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. அதிமுக செயற்குழுவில் 5 மணிநேரம் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. அது ஜனநாயக ரீதியான ஆரோக்கியமான விவாதமாக இருந்தது. செயற்குழுக் கூட்டத்தில் சசிகலா குறித்து விவாதிக்கப்படவில்லை. விவாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. முதல்வர் வேட்பாளர்  குறித்து 7ம் தேதி அறிவிப்பு வரும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதுகுறித்து மேலும் சொல்ல முடியாது. அக்டோபர் 7ல் ஒரு முடிவு தெரியும்

Related Stories: