புதுடெல்லி: ‘கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பாலியல் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச உணவுப் பொருட்களை வழங்க வேண்டும்,’ என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கொரோனா ஊரடங்கால், பாலியல் தொழில் முற்றிலும் முடங்கி விட்டதால், அதை சார்ந்த தொழிலாளர்கள் வருமானமின்றி உணவுக்கு கூட வழி இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாககேஸ்வர ராவ் அமர்வு, ‘பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்்டும்,’ என உத்தரவிட்டிருந்தது.