தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கிய உருளை மிதவை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியிலுள்ள ரெட்டைதாழை தெற்கு கடற்கரை பகுதியில், நேற்று மாலை உருளை வடிவிலான மிதவை அலைகளால் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியது.  மிகப்பெரிய வடிவிலான கருப்பு நிறத்துடன், 10 அடி உயரம், 15 அடி சுற்றளவில் சுமார் 2 டன் எடையுள்ளதாக இருந்தது. இந்த மிதவை பெரிய துறைமுகங்களில் கப்பல்கள் நிறுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய மிதவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மிதவையை கைப்பற்றிய தனுஷ்கோடி போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: