மதுரை: இலங்கையின் நிழல் உலக தாதா அங்கொட லொக்கா. சட்டவிரோதமாக தமிழகத்தில் நுழைந்து பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்ததாகவும், கடந்த ஜூலை மாதம் கோவையில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவர் உடல் மதுரை தத்தநேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது காதலி, நண்பர் மற்றும் மதுரையைச் சேர்ந்த வக்கீல் சிவகாமசுந்தரி ஆகிய 3 பேரை ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கொட லொக்கா தனது துப்பாக்கியை அவருடைய நண்பர் சனுக்காவிடம் கொடுத்து வைத்ததாகவும், அவர் மதுரையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.