புதுடெல்லி: காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இம்மாநிலம் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்காக பிரிக்கப்பட்டது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து, மெகபூபாவின் மகள் இல்டிஜா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டுக்காவலில் இருக்கும் தனது தாயை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.