ராணுவ கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்புப்படி வருகிற டிசம்பர் 1ம் தேதி மற்றும் டிசம்பர் 2ம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவித்திருந்த டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2021, பருவத்தில் சேருவதற்கான நுழைவு தேர்விற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்விற்கான எழுத்து தேர்வு தற்போது கோவிட்-19 சூழ்நிலை காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுகள் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Related Stories: