அதிமுக-வில் ஆரமித்தது குளறுபடி: காலையில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது ஈபிஎஸ் அமைச்சருடன் ஆலோசனை

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து வருகிறார். காலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி உள்ளிட்ட பலர் சந்தித்தனர். அதிமுக முதல்வர் வேட்பாளர் வரும் 7 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து நேற்று செயற்குழுவில் விவாதம் நடைபெற்றது. காலையில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் மாலையில் ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை எனவும், அதிமுக தான் மீண்டும் ஆட்சியமைக்கும் என ஓபிஎஸ்வுடனான ஆலோசனைக்கு பிறகு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார். ஓபிஎஸ்-ஈபிஸ் இருவருக்கும் எனது ஆதரவு உண்டு என அவர் தெரிவித்துள்ளார். மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சந்தித்துள்ளார். கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன், ஓபிஎஸ் உடன் தீடீர் சந்திப்பில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தற்போது ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.  

Related Stories: