வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,160-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.39 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை ஏற்றத்திலேயே இருந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று சற்று ஆறுதலாக விலை குறைந்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிவு உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது. இந்தக் கரோனா காலத்திலும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதும் அதனைத் தொடர்ந்து தங்க நகைகளின் விற்பனை விலை அவ்வப்போது உயர்ந்து வருவது கவனிக்கவேண்டிய விஷயமாகும். இதற்கு முக்கியக்காரணம் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தக் கரோனா காலத்தில் மற்ற துறைகளில் முதலீடு செய்வதைவிடத் தங்கத்தில் முதலீடு செய்து அதனால் எதிர்காலத்தில் அதிக லாபத்தை ஈட்டித்தர முடியும் என்ற கருத்து கணிப்பு என தகவலாகி வருகிறது.

இந்த நிலையில் இன்றைய நிலவரத்தில்  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ.4,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு உயர்ந்து ரூ.62.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: