ரூ.84 லட்சம் தங்க கட்டிகள் பிடிபட்டது

சென்னை: துபாயிலிருந்து ஏர் இந்தியா மீட்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது. அதில் வந்த 124 பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த மீசா மரைக்காயர் (43), அலி அஞ்சை (39), புதுக்கோட்டை ஹபீப் அப்துல்லா (21) ஆகிய 3 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனையிட்டபோது, 3 பேரின் உள்ளாடைகளில் 1 கிலோ 620 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.84 லட்சம். இதையடுத்து 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: