கவரிங் நகையை அடகு வைத்து ரூ.1.6 லட்சம் நூதன மோசடி

சென்னை: அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான் ஷெரிப் சையது (38). இவர் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 8ம் தேதி நகைகளை அடகு வைத்து ரூ.1.59 லட்சம் பெற்றுள்ளார்.

இதனிடையே, நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை அந்நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ரிஸ்வான் ஷெரிப் சையது அடகு வைத்த நகைகள் கவரிங் என தெரியவந்தது. அவரை தொடர்பு கொண்டபோது மாயமானது தெரிந்தது. நிதி நிறுவன மேலாளர் ராமலிங்கேஸ்வர ராவ் இதுகுறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரிஸ்வானை தேடி வருகின்றனர்.

Related Stories: