செல்போன் திருடியவர் கைது

புழல்: செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (33). செங்குன்றத்தில் குளிர்பானக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நித்யா. இவர் கடந்த 20ம் தேதி வீட்டில் தனது செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக டேபிள் மீது வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து அவர் செல்போனை வந்து பார்த்தபோது, அது மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மொண்டி அம்மன் நகர் மேட்டுத்தெருவை சேர்ந்த முருகன் (21) என்பவர் செல்போனைத் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து,  போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

Related Stories: