திருவள்ளூர்: திருமழிசை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் திருவள்ளூர் டி.எஸ்.பி துரைபாண்டியன் மேற்பார்வையில் வெள்ளவேடு சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் மற்றும் போலீசார் திருமழிசை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருமழிசை பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில் திருமழிசை பிரியாம்பத்து பகுதியை சேர்ந்த ராஜேஷ்(32) மற்றும் கௌதம்(28) ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 50 கிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.