உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடியாக உயர்வு: 9.98 லட்சம் பேர் பலி...2.44 கோடி பேர் குணம்.!!!

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்தை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 30 லட்சத்து 53 ஆயிரத்து 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 76 லட்சத்து 48 ஆயிரத்து 501 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 293 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 44 லட்சத்து 05 ஆயிரத்து 921 பேர் குணமடைந்துள்ளது. ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 98 ஆயிரத்து 716 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 7,287,561

இந்தியா - 5,990,581

பிரேசில் - 4,718,115     

ரஷியா - 1,143,571

கொலம்பியா - 806,038

பெரு - 800,142

மெக்சிகோ - 7,20,858

ஸ்பெயின் - 7,35,198

அர்ஜெண்டினா - 6,91,235

தென் ஆப்பிரிக்கா - 669,498     

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 209,177     

பிரேசில் - 141,441     

இந்தியா - 94,534

ரஷ்யா- 20,225

கோலம்பியா- 25,296

தென் ஆப்பிரிக்கா-16,376     

பெரு - 32,142

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 4,938,688    

அமெரிக்கா - 4,524,108     

பிரேசில் - 4,050,837

ரஷியா - 940,150    

கொலம்பியா - 700,112

பெரு - 657,836             

தென் ஆப்ரிக்கா - 601,818

Related Stories: