ஆடு திருடிய வாலிபருக்கு தர்ம அடி

ஆலந்தூர்:கீழ்க்கட்டளை பிள்ளையார் கோயில் பிரதான சாலையை சேர்ந்த லட்சுமணனின் ஆடுகளை நேற்று மேய்ச்சலுக்காக அதே பகுதியில் விட்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த மர்ம ஆசாமிகள் ஆடுகளை ஆட்டோவில் ஏற்ற முயன்றனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை விரட்டினர். அதில், ஒருவர் மட்டும் சிக்கினார். அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், கொடுங்கையூரை சேர்ந்த கார்த்திக் (25) என தெரிந்தது. தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: