நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வெடிகுண்டு வீசப்பட்டு 2 பெண்கள் வெட்டிக்கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வெடிகுண்டு வீசப்பட்டு 2 பெண்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். மறுகால்குறிச்சி கிராமத்தில் சண்முகத்தாய்(48), சாந்தி(45) ஆகிய பெண்கள் கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

10 பேர் கொண்ட கும்பல் 20 நாட்டு வெடிகுண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிய கும்பல் உள்ளே புகுந்து பெண்களை வெட்டிக் கொன்றது. காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முன்பகை காரணமாக இருவரும் கொல்லப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இதே பிரச்சனை காரணமாக இதற்கு முன் 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். காதல் விவகாரத்தால் ஓராண்டில் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

சாந்தி, சண்முகத்தாய் இவர்கள் இருவர் மீதும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. பின்னர் இருவரின் தலையும் துண்டிக்கப்பட்டுள்ளது. நாட்டு வெடிகுண்டு வீசியதில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு நடந்த இரட்டைக் கொலைக்குப் பழிவாங்கும் வகையில் நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. கொலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த கூலிப்படை ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Related Stories: