சென்னை: மணலியில் உள்ள 27 கன்டெய்னர் அம்மோனியம் நைட்ரேட் 3 நாட்களில் அகற்றப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் பேட்டியளித்தார். கன்டெய்னர்களுக்கு சுங்கத்துறை, தீயணைப்புத்துறை மூலம் பாதுகாப்பு வழங்கப்படும் என கூறினார். மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் கூறினார். சென்னையில் வழிப்பறி கொள்ளை, தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளன எனவும் கூறினார்.