ஆலந்தூர்: உணவு டெலிவரி ஊழியர் போல் நடித்து, மொபட்டில் கஞ்சா கடத்தி விற்பனை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கிண்டி பகுதியில் இளம்பெண் ஒருவர் மொபட்டில் கஞ்சா கொண்டுவந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கிண்டி பேருந்து நிலையம் அருகே நேற்று போலீசார் ரோந்து சென்றபோது, இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் மொபட்டுடன் நின்றிருந்தார்.அவரிடம் விசாரித்தபோது, பிரபல தனியார் நிறுவனத்தின் உணவு டெலிவரி ஊழியர் என தெரிவித்தார்.